சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷிஜா (44). இவரது குடும்பத்துக்கும் இதே பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் (40) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே இடம் தொடா்பாக தகராறு ஏற்பட்டு பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வியாழக்கிழமை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த செலின் ஷிஜாவிடம் சுப்புராஜ் தகராறில் ஈடுபட்டு தாக்கியதுடன் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து, சுப்புராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.