செய்திகள் :

Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்!

post image

நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்' படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது.

சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், திரைப்படக் குழு சார்பில் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Sardar 2 - கார்த்தி
Sardar 2 - கார்த்தி

இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ``சர்தார் என்று பெயர் வைத்திலிருந்தே இந்தப் படத்தின் மீது எனக்குத் தனி ஈர்ப்பு உண்டு.

மித்ரன் அடுத்து என்ன சொல்லிப் பயமுறுத்தப் போறாருனு எல்லோரும் கேக்கறாங்க. ஃபர்ஸ்ட் படத்துல (இரும்புத்திரை) மொபைல்ல மெசேஜ் வந்தாலே பயமா இருக்கும், அடுத்த படத்துல (சர்தார் 1) வாட்டர் பாட்டில் பாத்தாலே பயமா இருக்கும்.

இந்தப் படத்துல அதவிட பயங்கரமான விஷயத்தை வச்சிருக்கிறார். உண்மையாவே இந்தப் படத்துல அச்சுறுத்தக் கூடிய பெரிய விஷயத்தைத் தொட்டிருக்கார்.

வில்லன் எவ்ளோ பெரிய ஆளுன்றத வச்சுதான் ஹீரோ எவ்ளோ நல்லவன்றது. சண்ட போட்ற ரெண்டு பேரும் மிகப்பெரிய ஆளா இருந்தாதான் போர் சுவாரஸ்யமா இருக்கும்.

அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போர் பத்தி பேசுது. எதிர்ல எஸ்.ஜே. சூர்யா என்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். மித்ரன் ஒரு பழக்கம் என்னனா, ஃபர்ஸ்ட் ஃப்ளாஸ்பேக்தான் எடுப்பார். ஷூட்டிங் செட் பார்த்து பயந்துட்டேன்.

சர்தார் - எஸ்.ஜே. சூர்யா
சர்தார் - எஸ்.ஜே. சூர்யா

இன்னைக்குத் தயாரிப்பாளராக இருக்கிறது ஈஸி இல்ல. வெறும் ஐடியாவையும், உழைப்பையும் மட்டுமே நம்பி பெரிய ரிஸ்க் எடுக்குறாங்க.

அந்த அளவுக்கு, இந்தப் படத்துல மித்ரனோட உழைப்பை முக்கியமா பாக்றேன். எல்லோருக்கும் இது புரியனும், சுவாரஸ்யமா இருக்கணும்னு நெறைய மெனக்கெட்டிருக்கிறார்.

எஸ்.ஜே சூர்யாவுக்கு நடிப்புத் தீனி எவ்ளோ கொடுத்தாலும் அவருக்குப் பத்தறதில்ல. அவர் கேட்டு கேட்டு பண்றத பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.

அவர் செட் ல நாங்க செல்போன் தொட்றதே இல்ல. அவர்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிறதுக்கு அவ்ளோ விஷயம் இருக்கும். கைதிக்கு அப்புறம் நானும் சாம்.சி.எஸ்ஸும் இணைந்திருக்கோம்" என்று பேசி முடித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikram: "முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார்" - விக்ரம் கொடுத்த ஹின்ட்

சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் - பாகம் 2 திரைப்படம் வெளியானது.திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளிய... மேலும் பார்க்க

Pa.Ranjith : இணையும் ஆர்யா - தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! - 'வேட்டுவம்' அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது 'வேட்டுவம்' பட... மேலும் பார்க்க

மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங்கம்புலி ஷேரிங்க்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த `மகாராஜா' திரைப்படம் நடிகர் சிங்கம்புலிக்கும் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. காமெடி வேடங்களில் நகைச்சுவைப் புயலாகச் சுற்றியவர் இந்தப் படத்தில் வில்லனாக களமிற... மேலும் பார்க்க

FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ``தயாரிப்பாளர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. ஃபெஃப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் ... மேலும் பார்க்க

Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த அப்டேட்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக... மேலும் பார்க்க