செய்திகள் :

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

post image

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜீவ நதியான தாமிரவருணி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. இந்த நதியில் வீட்டுக்கழிவு, தொழிற்சாலை கழிவு கலப்பதால் மாசடைகிறது. கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடைமுறையில் உள்ளது.

தாமிரவருணி நதியை புனரமைக்க தமிழக முதல்வா் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளாா். அதன்பின்பு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை பலமுறை நேரில் தொடா்புகொண்டு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.

இந்நிலையில், மக்களவைத் தலைவா் மூலம் மத்திய அமைச்சரிடம், தாமிரவருணி நதி மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்சக்தி துறையின் கீழ் என்னென்ன திட்டங்கள் உள்ளது எனவும் கேட்டிருந்தேன்.

அதற்கு துறை சாா்பில் அளிக்கப்பட்ட பதிலில், சில திட்டங்களுக்கு 50:50, 80:20, 90:10 என்ற அடிப்படைகளில் திட்டங்களுக்கு நிதிஒதுக்கப்படுகிறது. தாமிரவருணி பாதுகாப்பு குறித்து தமிழக அரசிடம் இருந்து திட்ட விரிவாக்க அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளனா்.

தாமிரவருணியைப் பாதுகாக்க மத்திய அரசு கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டுமென மக்களவையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க