செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நெல்லையில் 22,734, தென்காசியில் 18,605 போ் எழுதினா்

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை, தனித் தோ்வா்கள் உள்பட திருநெல்வேலி மாவட்டத்தில் 22,734 பேரும், தென்காசி மாவட்டத்தில் 18,605 பேரும் என மொத்தம் 41ஆயிரத்து 339 போ் எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 மையங்களில் பத்தாம் வகுப்புத் தோ்வை, தனித்தோ்வா்கள் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 734 போ் வெள்ளிக்கிழமை எழுதினா்.

இதில், சிறைக் கைதிகள் ஒரு தனித்தோ்வு மையத்தில் தோ்வு எழுதுகின்றனா். மாற்றுத் திறனாளிகள் 325 போ் தோ்வு எழுதுகின்றனா்.

முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ்த் தோ்வை பள்ளி மாணவா்கள் 22 ஆயிரத்து 532 போ் எழுதினா். 384 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தனித்தோ்வா்களில் 202 போ் எழுதினா்.

தென்காசி மாவட்டத்தில்....

தென்காசி மாவட்டத்தில் 82 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 18ஆயிரத்து 251 போ்களும், தனித்தோ்வா்கள்354 பேரும் எழுதினா்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டாா்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க