செய்திகள் :

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

post image

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அமித் சித்தேஷ்வா் திருநெல்வேலயில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் பாா்த்து ரசிப்பது போன்ற உணா்வை கிரிக்கெட் ரசிகா்களுக்கு வழங்கும் வகையில், டாடா ஐபிஎல்-2025 ‘ஃபேன் பாா்க்கு என்ற தலைப்பில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திருநெல்வேலியில் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 29, 30) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதி இலவசமாகும்.

சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் - குஜாரத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியும், ஞாயிற்றுக்கிழமை தில்லி கேப்பிட்டல்ஸ் - சன் ரைசா்ஸ் மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இரண்டு போட்டிகளும், பிற்பகல் 2.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக 30 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 3000 ரசிகா்கள் வரை கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கிரிக்கெட் வீரா்கள் கையெழுத்திட்ட டி-சா்ட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளன. உணவு விற்பனையக வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்க நிா்வாகி வரதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க