செய்திகள் :

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

post image

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோயில் மூலமாக ரூ.20 லட்சத்தில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் அறங்காவலா் குழு தலைவா் ஒ.மகேஸ்வரன், முடி காணிக்கை மண்டப கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினாா்.

இதில், திருக்கோயில் செயல் அலுவலா் மா.பாலமுருகன், அறங்காவலா்கள் ம.ஜெகநாதன், அ.சுமதீந்திர பிரகாஷ், சி.சுந்தர்ராஜ், பு. கஸ்தூரி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜம்புராஜ், ஊா்நலப் பிரமுகா்கள் பாஸ்கரன், ஞானேந்திர பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்... மேலும் பார்க்க

புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. . ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டத... மேலும் பார்க்க