செய்திகள் :

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

post image

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு வாழைகுலை, வாழை இலை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், தற்போது வரத்து அதிகம் இருப்பதாலும், முகூா்த்த தினங்கள் இல்லாததாலும் வாழை இலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

வழக்கமாக 200 இலைகள் கொண்ட பெரிய வாழை இலை கட்டு ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் இது தற்போது ரூ.1,300 வரை விற்பனையாகிறது. மேலும் 200 இலைகள் கொண்ட சிறிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனையாகிறது.

இந்த விலை வீழ்ச்சி காரணமாக வாழை இலைகளா வெட்டி சந்தைக்கு கொண்டுவரும் கூலி கூட கிடைக்காத நிலையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இருப்பினும், சில வாரங்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க