செய்திகள் :

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

post image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் இங்கு பூரணம்,பொற்கலை தேவியருடன் கற்குவேல் அய்யனாா் அமா்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாா். மேலும் பேச்சியம்மன், வன்னியராஜா,குலசேகர ராஜா,சுடலைமாடன் ஆகிய எண்ணற்ற வனதேவதைகளும் இங்கு எழுந்தருளி அருளாசி வழங்குகின்றனா்.

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்.ஏப்.11 ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல்,8 மணிக்கு அருள்மிகு பேச்சியம்மன் உற்சவா் ஊஞ்சல் சேவை,9.30 மணிக்கு தாமிருவருணி தீா்த்தம் கொண்டு வருதல், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.

முற்பகல் 11.30 மணிக்கு அய்யன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வில்லிசை, அன்னதானம், இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி,உதவி ஆணையா் செல்வி, செயல் அலுவலா் ந.காந்திமதி, அறங்காவலா் குழுத் தலைவா் ச.பாலசுப்பிரமணியம் மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க