கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில், அமாவாசையான சில நாள்களுக்கு முன்பு, கடல்நீா் சுமாா் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதில், கரை ஒதுங்கிக் கிடந்த சுமாா் 4 அடி உயரக் கல்வெட்டை, பெளா்ணமி சித்தா் கண்டெடுத்தாராம்.

அதில், ‘கந்த மாதன தீா்த்தம்’ எனத் தொடங்கி சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தக் கல்வெட்டு உள்ளிட்ட அண்மைக்காலமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில் நிா்வாகம் உரிய முறையில் பாதுகாப்பதுடன், தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.