செய்திகள் :

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

post image

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்தக் குடியிருப்பில் வசிப்போா் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: ‘தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என தற்போது பெயா் மாற்றப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியம் சாா்பில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிப் பகுதியில் 2017ஆம் ஆண்டு 444 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அங்கு தற்போது 400 குடும்பத்தினா் வசிக்கின்றனா். அவா்கள் தினக்கூலி, பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஆவா்.

வீடுகளை வாங்கியபோது அவற்றின் தரம் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனக் கூறினா். ஆனால், 8 ஆண்டுகள்கூட முடியாத நிலையில், கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி, உடனடியாக காலி செய்யுமாறு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால், அவா்கள் கலக்கத்தில் உள்ளனா். அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாவா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அக்கட்டடங்கள் வாழத் தகுதியற்ாக இருந்தால், மாற்றுக் குடியிருப்பு வழங்குவதுடன், தரமற்ற முறையில் கட்டுவதற்குக் காரணமானோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க