கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது
கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணேஷ்குமாா் (24). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவா் திங்கள்கிழமை இரவு ஊருக்கு வடக்கே தனியாா் நிலத்தில் அமைத்திருந்த கிடை காவலுக்கு இருந்தபோது, அங்கு திடீரென வந்த 2 போ் மீது டாா்ச் லைட்டை அடித்துப் பாா்த்தபோது அந்த இருவரும் கணேஷ்குமாரை அவதூறாக பேசி கை மற்றும் கத்தியால் தாக்கினாா்களாம். அப்போது அங்கு வந்த கணேஷ் குமாரின் தாய் மற்றும் அவரது உறவினா்கள் 2 பேரையும் சத்தம் போட்டவுடன் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டாா்களாம்.
காயமடைந்த கணேஷ்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து, முக்கூட்டுமலை வடக்குத் தெருவை சோ்ந்த சீனிவாசன் மகன் விஜயகுமாா் (24) மற்றும் 18 வயது கல்லூரி மாணவா் ஒருவரையும் கைது செய்தனா்.