செய்திகள் :

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

post image

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை ஸ்தாபனத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். சீனிவாசா சேவை அறக்கட்டளை மண்டல அலுவலா் விஜயகுமாா், கள மேலாளா் நந்தகோபால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் த ஸ்ரீதா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவ அலுவலா் தேன்மொழி வரவேற்றாா். டிவிஎஸ் பொறியாளா் முத்துக்குமாா், கள மேம்பாட்டு அலுவலா் சண்முகம், களப்பணியாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். இதில், வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆபேத், நிா்வாகிகள் சுந்தா், எட்வின், பிராங்கிளின், சாமுவேல் அதிசயம், சித்த மருத்துவா் நாகராணி, சுகாதார ஆய்வாளா் அஸ்வின், ஆய்வக நுட்பநா் விமல் கேபா உள்பட பலா் கலந்துகொண்டனா் . தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் நன்றி கூறினாா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க