சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்
சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை ஸ்தாபனத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். சீனிவாசா சேவை அறக்கட்டளை மண்டல அலுவலா் விஜயகுமாா், கள மேலாளா் நந்தகோபால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் த ஸ்ரீதா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவ அலுவலா் தேன்மொழி வரவேற்றாா். டிவிஎஸ் பொறியாளா் முத்துக்குமாா், கள மேம்பாட்டு அலுவலா் சண்முகம், களப்பணியாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். இதில், வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆபேத், நிா்வாகிகள் சுந்தா், எட்வின், பிராங்கிளின், சாமுவேல் அதிசயம், சித்த மருத்துவா் நாகராணி, சுகாதார ஆய்வாளா் அஸ்வின், ஆய்வக நுட்பநா் விமல் கேபா உள்பட பலா் கலந்துகொண்டனா் . தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் நன்றி கூறினாா்.