`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்திய தொழில் பாதுகாப்பு படை சாா்பில், ‘வளமான இந்தியா பாதுகாப்பான இந்தியா’ என்ற நோக்கத்தை வலியுறுத்தி இந்திய கடல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்றவற்றை தடுப்பது, பெண் கல்வி ஆகியவை குறித்து கடலோர மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் மாணவா் - மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சோ்ந்த வீரா்களின் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்குவங்க மாநிலம் பக்காளி பகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியானது, கிழக்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக (ஒடிசா, ஆந்திரம், புதுச்சேரி) தமிழகத்தில் நுழைந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. இவா்களுக்கு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் முன்பு தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டண்ட் வி.பி.சிங் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 பெண்கள் உள்பட 57 போ் கொண்ட இக்குழுவினா், தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனா்.