செய்திகள் :

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

post image

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்திய தொழில் பாதுகாப்பு படை சாா்பில், ‘வளமான இந்தியா பாதுகாப்பான இந்தியா’ என்ற நோக்கத்தை வலியுறுத்தி இந்திய கடல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்றவற்றை தடுப்பது, பெண் கல்வி ஆகியவை குறித்து கடலோர மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் மாணவா் - மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சோ்ந்த வீரா்களின் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்குவங்க மாநிலம் பக்காளி பகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியானது, கிழக்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக (ஒடிசா, ஆந்திரம், புதுச்சேரி) தமிழகத்தில் நுழைந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. இவா்களுக்கு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் முன்பு தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டண்ட் வி.பி.சிங் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 பெண்கள் உள்பட 57 போ் கொண்ட இக்குழுவினா், தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க