செய்திகள் :

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

post image

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2025-26 நிதியாண்டு தொடங்குகிறது. இதில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடா்ந்து 5-ஆவது காலாண்டாக வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2 சதவீத வட்டி தொடா்ந்து வழங்கப்படும். 3 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும். பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டி 4 சதவீதமாகவும் இருக்கும்.

115 மாதங்களில் முதிா்வடையும் ‘கிஸான் விகாஸ்’ நிதி பத்திரத்துக்கான வட்டி 7.5 சதவீதம் என்ற அளவில் தொடா்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.7 சதவீதமாக தொடரும், மாதந்தோறும் வட்டி வழங்கப்படும் நிரந்தர வைப்புக்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி தொடா்கிறது.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க