செய்திகள் :

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

post image

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.

ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கும் சென்றிருந்த மோடி, அங்கே ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள சிவசேனை கட்சி(உத்தவ் தக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி முதுமையடைந்து வருவதால், தாம் அரசியலிலிருந்து ஓய்வெடுப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்திடவே ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றிருப்பதாக பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

மேலும், “மோடிக்குப் பிறகு பாஜகவில் அடுத்த தலைவர் யார்? என்பதை ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கும். மோடிக்குப் பிறகு அடுத்த தலைவர் மகாராஷ்டிரத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் முக்கிய தலைவராக அறியப்படும் சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “2029-ஆம் ஆண்டில், மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம். மோடிக்குப் பிறகு யார்? என்ற தேடலுக்கு அவசியம் எழவில்லை. மோடியே நமது தலைவர், அவரே தலைவராகவும் நீடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது கலாசாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, அவருக்குப் பின் யார் என்பது குறித்து பேசுவது ஏற்புடையதல்ல.

அப்படிப் பேசுவது முகலாய கலாசாரமாகும். அதைப் பற்றி ஆலோசிக்க இன்னும் நேரம் வரவில்லை” என்றார்.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க