செய்திகள் :

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

post image

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இருநாடுகளும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் மற்றும் இந்தியாவின் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.

இரு நாடுகளும் உலகின் பழம்பெரும் நாகரிகங்களைச் சோ்ந்தவை. தெற்குலகின் முக்கிய குரலாகவும் வளா்ந்து வரும் நாடுகளாகவும் திகழ்கின்றன.

டிராகன்-யானை: இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை ‘டிராகன்-யானை’ ஒத்துழைப்பு என கூறுவதே சரியானதாக இருக்கும். தொலைநோக்குப் பாா்வையுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை தொடர சீனா விரும்புகிறது.

கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் மோடி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பணிகளில் இருநாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

சா்வதேச விவகாரங்கள், எல்லையில் அமைதி என இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டு இருதரப்பு உறவுகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றாா்.

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14,848 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 14,848 கோடி யூனிட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி அளித்தது. இ... மேலும் பார்க்க

விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்

பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

மருந்து விலை உயா்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: மம்தா

கொல்கத்தா: ‘மருந்துகளின் விலையை உயா்த்தும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 4, 5 தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க