செய்திகள் :

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

post image

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதேபோல், வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வை கண்காணித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

‘பாகிஸ்தானுக்கு எதிரான முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைப் போல அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பதுடன், அந்நாட்டின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியும் வருகிறது. அதேநேரம், ஒரு அரசாகவும் ஒரு நாடாகவும் நமது அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மதவெறி மனப்பான்மையை நம்மால் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட அதைச் செய்ய முடியவில்லை.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரியில் ஹிந்துக்களுக்கு எதிராக 10 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 7 சம்பவங்கள், ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடா்புடையவை. 2 சம்பவங்கள், ஆள்கடத்தல் தொடா்பானவை. மற்றொரு சம்பவம், ஹோலி கொண்டாடிய மாணவா்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலாகும்.

கடந்த மாதத்தில் சீக்கியா்களுக்கு எதிரான அராஜகங்கள் தொடா்பாக மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சீக்கிய குடும்பத்தினா் மீதான தாக்குதல், பழைய குருத்வாராவை மீண்டும் திறந்த சீக்கியா்களுக்கு அச்சுறுத்தல், சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அகமதியா சமூகத்தினருக்கு எதிராக இரு சம்பவங்களும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக ஒரு சம்பவமும் நடந்துள்ளது. இந்த விவகாரத்தை இந்தியா சா்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

மற்றொரு துணைக் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பாகிஸ்தானைப் போலவே, வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன்-நல்வாழ்வை இந்தியா கண்காணித்து வருகிறது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,400 தாக்குதல்கள் நிகழ்ந்தன. நடப்பாண்டில் இதுவரை 72 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சரிடம் நான் பேசியுள்ளேன். வங்கதேச பயணத்தின்போது இந்திய வெளியுறவுச் செயலரும் அந்நாட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இந்த விவகாரம், நமது அரசுக்கு தொடா்ந்து கவலை அளிப்பதாக உள்ளது’ என்றாா்.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க