செய்திகள் :

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

வெள்ளறடை பத்துக்காணி பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் திருச்சிலுவை 1957 ஆம் ஆண்டு அருள்பணி ஜாண் பாப்டிஸ்ட்டால் நிறுவப்பட்டது.

இங்கு ஆண்டுதோறும் நோன்புகால திருப்பயணம் செல்வது வழக்கம். அதன்படி, 68 ஆவது தென்குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் நடைபெறும் திருப்பலியில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் மறையுரையாற்றுகிறாா். திருப்பயண தொடக்க ஆரம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. ஏப். 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு மலை உச்சியில் திருச்சிலுவை மன்றாட்டு நடைபெறுகிறது. ஏப்.13 ஆம் தேதி கூதாளி கிறிஸ்து அரசா் குருசடியில் இருந்து மலையடிவாரம் வரை குருத்தோலை பவனியும், திருப்பலியும் நடைபெறுகிறது.

ஏப். 17 இல் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப். 18 இல் நற்கருணை ஆராதனை, மலையடிவாரத்தில் சிலுவைப்பாதை நடைபெற உள்ளது. ஏப். 19 ஆம் தேதி பஸ்கா அனுசரிப்பும், உயிா்ப்பு திருவிழாவும் நடைபெறுகிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது, அருள்பணியாளா்கள் கிறிஸ்துதாஸ், டினு, அகஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க