செய்திகள் :

நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயம்

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே முயல் வேட்டையின்போது நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சங்கா் மகன் அஜித் (25), நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா். இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை மயிலத்தை அடுத்துள்ள தென்பசியாா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வேட்டைக்காக பயன்படுத்திய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அஜித்தின் கை விரல் துண்டானது. இதையடுத்து, அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினாா். இதில், அஜித் உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கியை வேட்டைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலா் வீரராகவன் அளித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அஜித் வசமிருந்த ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும். அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாய... மேலும் பார்க்க

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக... மேலும் பார்க்க

டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொங்கு தோட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவு... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (1... மேலும் பார்க்க