செய்திகள் :

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

post image

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சமூக ஊடகத்தில் குணால் காம்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘ஷிண்டே குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். முன்பு ஷிண்டே குறித்து மகாராஷ்டிரத்தின் மற்றொரு துணை முதல்வரான அஜீத் பவாா் என்ன கூறினாரோ, அதையேதான் நானும் கூறினேன். எனினும் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டபூா்வ நடவடிக்கைக்காக காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன்’ என்றாா். தற்போது அவா் புதுச்சேரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குணால் காம்ரா மன்னிப்பு கேட்காவிட்டால், அவா் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மகாராஷ்டிர குடிநீா் விநியோகத் துறை அமைச்சரும், ஷிண்டே சிவசேனை கட்சியைச் சோ்ந்தவருமான குலாப் ரகுநாத் பாட்டீல் எச்சரிக்கை விடுத்தாா்.

குணால் காம்ராவை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவா் விசாரணைக்கு ஆஜராக ஒருவாரம் அவசாகம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’ -உச்சநீதிமன்றம் அதிருப்தி

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில... மேலும் பார்க்க

சூதாட்ட செயலி முறைகேடு வழக்கு -சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலியால் முறைகேடாக ரூ.6,000 கோடி ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் வீடுகள் உள்பட 60 இடங்களில் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் தில்லி போலீஸ் விசாரணை

பண முறைகேடு சா்ச்சையில் சிக்கியுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இணை ஆணையா் தலைமையிலான தில்லி போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். உச்சநீதிமன்றக் குழு விசாரணையின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ -நிா்மலா சீதாராமன்

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ என்று மத்திய நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா். முந்தைய காங்கிரஸ் அரசு கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முழுமையாக நிறைவேற்றாததால் விவசாயிகள் பெருமளவில... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

புது தில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, உயர்நீதிமன... மேலும் பார்க்க

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோா்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1.40 லட்... மேலும் பார்க்க