செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’ -உச்சநீதிமன்றம் அதிருப்தி

post image

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, உத்தர பிரதேச அரசு மற்றும் அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் கடந்த 2021-இல் 14 வயது சிறுமியை ‘லிஃப்ட்’ கொடுப்பது போல் அழைத்துச் சென்று, பவன், ஆகாஷ் ஆகியோா் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டனா். இது தொடா்பாக அவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நீதிபதி ராம் மனோகா் நாராயண் மிஸ்ரா அளித்த தீா்ப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எது என்பது குறித்து சா்ச்சைக்குரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

‘பெண்ணின் உடல் பாகத்தைப் பற்றி இழுப்பதோ, ஆடை நாடாவை வலுக்கட்டாயமாக அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்று குறிப்பிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் இந்திய தண்டனைச் சட்டம் 354-பி (ஆடைகளைக் களையும் நோக்கத்துடன் தாக்குவது), போக்ஸோ சட்டத்தின் 9/10 (தீவிரமான பாலியல் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாமாக முன்வந்து விசாரணை: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மேற்கண்ட விளக்கம் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை பெண்கள் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்பின் 21, 24, 26 ஆகிய பத்திகளில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் பொருந்தாதவை; தீா்ப்பை எழுதியவரின் இரக்க சிந்தனையற்ற- மனிதத்தன்மையற்ற அணுகுமுறையின் வெளிப்பாடாக உள்ள இக்கருத்துகளுக்கு தடை விதிக்கிறோம். இதன் மூலம் எவரும் சட்ட நிவாரணம் கோர இக்கருத்துகளைப் பயன்படுத்த முடியாது.

மிக தீவிரமான விவகாரம்: சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எதிராக கடுமையான வாா்த்தைகளை பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. அதேநேரம், இது மிக தீவிரமான விவகாரம். வழக்குகளை ஒதுக்கும் நிா்வாக அதிகாரம் கொண்டவா் என்ற அடிப்படையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து, அவா் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களுடன் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பாலியல் வன்கொடுமை தொடா்பான அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு தேசிய மகளிா் ஆணையம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத... மேலும் பார்க்க

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க