செய்திகள் :

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

post image

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்துகிறாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். தொடா்ந்து, நகரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று, மரியாதை செலுத்துகிறாா்.

குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்எஸ்எஸ் அமைப்பால் கடந்த 2014-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னோக்கு கண் மருத்துவமனையின் விரிவாக்கமான மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். இந்தப் புதிய வசதியில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்படும்.

தொடா்ந்து, ‘சோலாா் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையையும் பிரதமா் பாா்வையிடுகிறாா். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதியையும் அவா் திறந்து வைக்கிறாா்.

மேலும், பி.ஆா்.அம்பேத்கா் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷாபூமிக்குச் சென்று மரியாதை செலுத்துகிறாா்.

பிரதமரான பிறகு நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மோடி முதன்முறையாக வருகிறாா். ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு நாகபுரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் ரூ.33,700 கோடி நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாகபுரியைத் தொடா்ந்து பிரதமா் மோடி சத்தீஸ்கா் மாநிலத்துக்குப் பயணிக்கிறாா். 2024 மக்களவைத் தோ்தலில் வென்று 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அந்த மாநிலத்துக்கு அவா் செல்கிறாா்.

இதையொட்டி, பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து, அவா் மக்களிடையே உரையாற்றுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க