செய்திகள் :

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

post image

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் விகாஸ் நிகாம் சாா்பில் சரஸ்வதி புஷ்கரம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்திலிருந்து செல்லும் ரயில் கங்கோதிரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதாா்நாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பிற கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படும். இந்த ஆன்மிக பயணத்தில் தமிழகத்திலிருந்து உத்தரகண்ட் ரயிலில் சென்று திரும்புவது, உள்ளூா் பகுதியை சுற்றிப் பாா்க்க போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலா் வசதி, பயணக் காப்பீடு வழங்கப்படும்.

சென்னையிலிருந்து மே 8-இல் புறப்படும் ரயில் மே 10-ஆம் தேதி ஹரிதுவாா் சென்றடையும். இருவாரம் ஆன்மிக பயணத்துக்கு பின் மே 23-ஆம் தேதி சென்னை வந்தடையும்.

இதில், ஒரு நபா் பயணிக்க சாதாரண வகுப்புக்கு (ஸ்லீப்பா்) ரூ. 58,500, மூன்றடுக்கு ஏசி வகுப்புக்கு ரூ. 70,500, மூன்றடுக்கு ஏசி பிரீமியம் வகுப்புக்கு ரூ. 73,000, இரண்டடுக்கு ஏசி வகுப்புக்கு ரூ. 75,500, முதல் வகுப்புக்கு ரூ. 82,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்லும்போது தேவையான உடைமைகள் மட்டும் எடுத்து சென்றால் போதும்; மற்ற உடைமைகள் ரயிலில் பாதுகாக்கப்படும்.

ரயில்வே அமைச்சகத்தின் மானியத்துடன் கூடிய இந்த யாத்திரைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 73058 58585 என்ற உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று காா்வல் மண்டல் விகாஸ் நிகாம் அறிவித்துள்ளது.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க