செய்திகள் :

செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

post image

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட மதுரையைச் சேர்ந்த அய்யனார், கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா தெரிவித்தார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 2) கடிதம் எழுதிய... மேலும் பார்க்க

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை: செல்வப்பெருந்தகை

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,• குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க