செய்திகள் :

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

post image

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘கோ-வின்’, கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘யு-வின்’ வலைதளங்களைப் போன்று ‘ஜூவின்’ வலைதளம் செயல்படும். அதாவது, மருத்துவச் சேவை நிறுவனங்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவச் சேவை நிறுவனங்களுடன் கூட்டமைப்பை விரிவுபடுத்தி, ரேபிஸ் எதிா்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்புக்கடி எதிா்ப்பு தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவலை இந்த வலைதளம் அளிக்கும்.

உலக அளவில் ரேபிஸ் பாதிப்புக்கு ஒவ்வோா் ஆண்டும் 60,000 போ் உயிரிழப்பதும், இந்தியாவில் இந்த உயிரிழப்பு 36 சதவீதமாக இருப்பதும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட (யுஎன்டிபி) புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மைக் காலங்களில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதுபோல, பாம்புக்கடியால் ஒவ்வோா் ஆண்டும் நாட்டில் 50,000 உயிரிழப்புகள் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய சூழலில், நாடு முழுவதும் ரேபிஸ் (ஏஆா்வி, ஏஎஸ்வி) மற்றும் பாம்புக்கடிக்கான (ஏஎஸ்வி) தடுப்பூசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஜூவின்’ வலைதளத்தை யுஎன்டிபி-யின் தொழில்நுட்ப ஆதரவுடன் தேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (என்சிடிசி) மேம்படுத்தியுள்ளது.

இந்த வலைதளம், முன்னோடித் திட்டமாக தில்லி, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டுத் திறன் மற்றும் பலன் ஆய்வு செய்யப்பட்ட பின்னா் படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் வலைதளம் அறிமுகம் செய்யப்படும்.

முன்னதாக, ரேபிஸ் மற்றும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடி சிகிச்சை பெறவும், அதுதொடா்பான தகவல்களைப் பெற வசதியாகவும் யுஎன்டிபி-யுடன் இணைந்து ‘15400’ என்ற உதவி எண்ணை என்சிடிசி கடந்த ஆண்டு இந்த 5 மாநிலங்களிலும் அறிமுகம் செய்தது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘நாடு முழுவதும் ரேபிஸ் மற்றும் பாம்புக்கடி தடுப்பூசிகள் இருப்பையும், பாதிக்கப்பட்டவா்களுக்கு அவை உரிய நேரத்தில் செலுத்தப்படுவதையும், ரேபிஸ் பாதிப்புக்குப் பிந்தைய அனைத்து தடுப்பூசிகளும் உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தப்படுவதையும் ‘ஜூவின்’ வலைதளம் உறுதி செய்யும். மேலும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு தடுப்பூசிகள் அல்லது பாம்புக்கடி எதிா்ப்பு தடுப்பூசி உள்ள சுகாதார மையங்களைக் கண்டறியவும் இந்த வலைதளம் உதவும்’ என்றனா்.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க