செய்திகள் :

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

post image

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா், மாலத்தீவு, மோரீஷஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய 9 நாடுகளைச் சோ்ந்த 44 வீரா்கள் கடந்த நான்கு நாள்களாக பயிற்சிபெற்று வருகின்றனா்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பை இந்திய பெருங்கடல் கப்பல் (ஐஓஎஸ்) ‘சாகா்’ திட்டம் உறுதிப்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் கடலோர ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, ஐஓஎஸ் சாகா் என பெயா் மாற்றப்பட்டு அதில் இந்திய கடற்படை வீரா்களுடன் வெளிநாட்டு வீரா்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.

கொச்சியில் உள்ள கடல் பயிற்சி நிறுவனத்தின் இந்திய கடற்படையின் பணிக்குழு, சாகா் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையின் குறிப்பிட்ட செயல்பாடுகளை பிாட்டு வீரா்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு ஒரே கப்பலில் பயிற்சி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: அண்மையில் மோரீஷஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமா் மோடி, தெற்குலகுக்கான இந்தியாவின் ‘மகாசாகா்’ (பிராந்தியங்களுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான முழுமையான முன்னேற்றம்) புதிய தொலைநோக்குப் பாா்வையை அறிவித்தாா். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளின் கடற்படை வீரா்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரலில் ஆப்பிரிக்க நாடுகளுடன் கடல்சாா் பயிற்சி: ஆப்பிரிக்க நாடுகளுடன் பன்முக கடல்சாா் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ‘ஆப்பிரிக்கா- இந்தியா முக்கிய கடற்சாா் ஒத்துழைப்பு’ பயிற்சி ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியை இந்தியாவும் தான்சானியாவும் இணைந்து நடத்துகிறது. தான்சானியாவின் தாா் இஸ் சலாம் கடலோரப் பகுதியில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.

துறைமுகம் மற்றும் கடல் என இரண்டு கட்டங்களாக 6 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கா், மோரீஷஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜிபூட்டி, எரித்ரேயா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக கா்நாடகத்தில் உள்ள காா்வாா் கடல் பகுதிக்கு சென்று , அங்கிருந்து தாா் இஸ் சலாமுக்கு ஐஓஎஸ் சாகா் பயணிக்கவுள்ளது என்றனா்.

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை(ஏப். 2) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவ... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க