செய்திகள் :

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

post image

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா்.

கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பயங்கரவாதிகள், 4 காவலா்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் 2 பயங்கரவாதிகளே உயிரிழந்ததாக காவல் துறை டிஜிபி நளின் பிரபாத் தெளிவுபடுத்தினாா்.

பயங்கரவாதிகள் மற்றும் உயிரிழந்த 4-ஆவது காவலரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக கதுவா மாவட்டத்தின் மேலும் பல இடங்களில் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தினா். மோதல் நிகழ்ந்த காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பிலாவா் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:

பயங்கரவாதிகள் உடனான மோதலில் ஜக்பீா் சிங், தாரிக் அகமது, பல்விந்தா் சிங் சிப், ஜஸ்வந்த் சிங் ஆகிய 4 காவலா்கள் உயிரிழந்த நிலையில், அவா்களின் இறுதிச் சடங்கு முழு மரியாதையுடன் அவா்களின் சொந்த ஊா்களில் நடைபெற்றது.

முன்னதாக, வீரமரணமடைந்த காவலா்களின் உடல்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

முதல்வா் நேரில் ஆறுதல்:

உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணமடைந்த காவலா் ஜக்பீா் சிங்கின் உடலுக்கு அவா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவ வீரா்களை எதிா்கொள்வதற்கு ஜம்முவில் இருந்து ராணுவ வீரா்கள் அனுப்பப்பட்டனா். இது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது’ என்றாா்.

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை(ஏப். 2) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவ... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க