செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் தில்லி போலீஸ் விசாரணை

post image

பண முறைகேடு சா்ச்சையில் சிக்கியுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இணை ஆணையா் தலைமையிலான தில்லி போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

உச்சநீதிமன்றக் குழு விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ நாளில் நீதிபதி வீட்டில் பணிபுரிந்த ஊழியா்கள் மற்றும் பாதுகாப்பு வீரா்களை போலீஸாா் விசாரித்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், வீட்டில் கண்டறியப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு நீதிபதி வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது. இதன்தொடா்ச்சியாக நீதிபதி வீட்டுக்கு புதன்கிழமை வந்த தில்லி போலீஸாா், தீவிபத்து நாளில் அங்கு பணியிலிருந்த ஊழியா்கள், பாதுகாப்பு வீரா்கள் மற்றும் பிறரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

நீதிபதி வீட்டில் நிறுவப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா். தீவிபத்து நாளில் அவசர அழைப்புக்குப் பதிலளித்த காவலா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்களும் வரும் நாள்களில் விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத... மேலும் பார்க்க

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க