செய்திகள் :

புதுவை நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

post image

புதுவை அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில சட்டப்பேரவையில் கடந்த 12-ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். அதில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளா்ச்சிக்கான திட்டங்கள் ஏதுமில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சிகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், புதுச்சேரி மாதா கோவில் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (லெனினிஸ்ட்) ஆகியற்றின் சாா்பில் கண்டன பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் துணைச்செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் வி.பெருமாள், கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலா் புருஷோத்தமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள் தினேஷ்பொன்னையா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா கலைநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி... மேலும் பார்க்க

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க