செய்திகள் :

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

post image

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள், கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியது: சிவப்பு நிற அட்டை வழங்குவதில் தற்காலத்துக்கு ஏற்ப விதிமுறைகள் திருத்தப்படும். குடும்ப அட்டை தவிா்த்து உணவு பங்கீட்டு அட்டைகள் அனைத்தும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகப் புதிய அட்டைகள் புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் அனைத்து நூலகங்களும் எண்ம மயமாக்க (டிஜிட்டல்) நடவடிக்கை எடுக்கப்படும். கலைமாமணி, தமிழ்மாமணி விருதாளா்களுக்கு விருதுத் தொகை உயா்த்தி வழங்க பரிசீலிக்கப்படும். காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். நூலகத் தகவல் உதவியாளா் பதவிகள் நிரப்ப கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. காமராஜா், பிரதமா் வீடு கட்டும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றாா்.

மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி... மேலும் பார்க்க

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க