செய்திகள் :

பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

post image

ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில் டைகர் என்பவரை, புதன்கிழமை பகல்வேளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பைக்கில் தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஜார்கண்ட் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் குப்தா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கூறினார்.

இந்த நிலையில், அனில் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜகவும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி தெரிவித்ததாவது, ``பாஜக ராஞ்சி கிராமப்புற மாவட்ட பொதுச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பரிஷத் உறுப்பினருமான அனில் டைகர், கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலத்தில் குற்றவாளிகள் அச்சமேதுமின்றி, மக்கள் பிரதிநிதிகளைத் தாக்குகின்றனர்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை முற்றிலும் சரிந்து விட்டது. சாமானிய குடிமக்களோ மக்கள் பிரதிநிதிகளோ மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை. இந்த கொலை சம்பவத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று, உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

மேலும், மாநிலத்தின் மோசமான நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதையும் படிக்க:மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!

ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத... மேலும் பார்க்க

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மா... மேலும் பார்க்க

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க