செய்திகள் :

டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?

post image

மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்கும் ஓர் அதிர்ஷ்டசாலி பயணிக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும், வாரம் பம்பர் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Train

எட்டு வாரங்களுக்கு நீடிக்கும் இந்த திட்டம் டிக்கெட் அல்லது சீசன் பாசுடன் பயணிகள் பயணிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் எந்த ஒரு டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. FCB இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் இந்த திட்டத்திற்கு பங்களித்துள்ளது.

மத்திய ரயில்வேயில் சராசரியாக ஒரு நாளைக்கு 40 லட்சம் பேர் பயணிக்கின்றனர். டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் பங்கு 20% என தோராயமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதில் டிக்கெட் பரிசோதனை செய்பவர்களால் தினமும் 4000 முதல் 5000 பேர் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்ததற்காக பிடிப்படுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையிலும், பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும், டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரயில் நிலையங்களில் திடீரென டிக்கெட் அல்லது சீசன் பாசை காண்பிக்கும்படி கேட்பார்கள், சரி பார்த்த பிறகு ரொக்க பரிசு உடனடியாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியிருக்கிறார்.

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க

Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும். இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிர... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!

64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப... மேலும் பார்க்க

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின்... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: `என் பக்கத்துல உட்கார்ந்துட்டு பியானோ வாசிச்ச பையன்' - கலங்கும் பியானோ டீச்சர்

வாட்ஸ் அப் குரூப் ஒன்றில், 'மனோஜ் என்னுடைய மாணவன். வெரி நைஸ் பாய்' என்று வருத்தமுடன் பதிவு செய்திருந்தார் ஒரு பெண்மணி. அவர் பெயர் ரதி மாசிலாமணி. அவரைத் தொடர்புகொண்டோம். ''மனோஜ் என்னோட மியூசிக் கிளாஸ்ல... மேலும் பார்க்க