செய்திகள் :

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும்.

இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிரோதமாக முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர்.

தெலங்கானாவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரே வாலிபர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்டார்.

ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள கொமரம் பீம் என்ற கிராமத்தில் இத்திருமணம் நடந்துள்ளது. சூர்யதேவ் என்ற வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த லால்தேவி மற்றும் ஜல்கரி தேவி ஆகியோரைக் காதலித்து வந்தார்.

இது குறித்து இரண்டு பெண்களுக்கும் தெரிய வந்தது. உடனே சூர்யதேவை இரண்டு பேருமே திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிப்பது என்று முடிவு செய்தனர்.

இதற்கு ஆரம்பத்தில் கிராம பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மூவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டு பெண்களின் பெயரையும் போட்டு திருமண அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து ஊரையே கூட்டி இரண்டு பெண்களையும் சூர்யதேவ் திருமணம் செய்து கொண்டார்.

சூர்யதேவ் கையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண்களும் திருமணச் சடங்குகளைச் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

ஒரேநேரத்தில் இரு பெண்களுடன் திருமணம்

கடந்த 2021ம் ஆண்டு தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் இதே போன்று வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்.

2022ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதே போன்று ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு - இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வி... மேலும் பார்க்க

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க