MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும்.
இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிரோதமாக முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர்.
தெலங்கானாவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரே வாலிபர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்டார்.

ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள கொமரம் பீம் என்ற கிராமத்தில் இத்திருமணம் நடந்துள்ளது. சூர்யதேவ் என்ற வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த லால்தேவி மற்றும் ஜல்கரி தேவி ஆகியோரைக் காதலித்து வந்தார்.
இது குறித்து இரண்டு பெண்களுக்கும் தெரிய வந்தது. உடனே சூர்யதேவை இரண்டு பேருமே திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிப்பது என்று முடிவு செய்தனர்.
இதற்கு ஆரம்பத்தில் கிராம பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மூவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இரண்டு பெண்களின் பெயரையும் போட்டு திருமண அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து ஊரையே கூட்டி இரண்டு பெண்களையும் சூர்யதேவ் திருமணம் செய்து கொண்டார்.
சூர்யதேவ் கையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண்களும் திருமணச் சடங்குகளைச் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டு தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் இதே போன்று வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்.
2022ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதே போன்று ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY