செய்திகள் :

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

post image

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின் மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள கப்பலில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மிதக்கும் படகு தான் இவர்களது வீடு, இதில்தான் தங்களது அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

இதற்காக தம்பதியினர் கிட்டத்தட்ட தங்கள் எல்லா உடைமைகளையும் விற்றுள்ளனர். தங்களது உடைமைகளை படகில் பயணிப்பதற்காகவே 6000 கிலோவிலிருந்து வெறும் 120 கிலோவாக குறைத்து இருக்கின்றனர்.

படகில் எந்தெந்த பொருள்கள் வைத்திருக்க முடியுமோ, அவற்றை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

வைதேகி மண்பாண்ட பொருள்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இந்த படகில் தங்களது வாழ்க்கையை வாழ்வதற்காக அதனைக் கைவிட்டு உள்ளார்.

இது இவர்களின் நீண்ட கால கனவு என்று கூறுகின்றனர். நிதி கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த கனவு கைகூடாமல் இருந்த நிலையில், கோவிட் காலத்தில் இந்த கனவு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் உலக அளவில் படகு விலை அப்போது குறைந்து காணப்பட்டதால், இதனை இந்தக் குடும்பம் சாத்தியமாக்கியுள்ளது.

இவர்களின் மகன் கயா, தினமும் அன்றாட பள்ளிக்கு செல்லும் மற்ற மாணவர்களைப்போல் அல்லாமல்... வீட்டில் இருந்தே அவரின் கல்வியை தொடர்கிறார். பாட புத்தகங்களை தாண்டி, நிறைய பாடங்களை நேரடியாக கற்று கொள்கிறார்.

அவர் கடல்வாழ் உயிரினங்களை பற்றி நேரடியாக கற்றுக் கொள்கிறார். இந்தப் பயணங்களின்போது வெவ்வேறு கலாசாரங்களை அனுபவிக்கிறார். கயாவுக்கு விடுமுறை என்பது முடிவில்லாதது என்று கூறுகின்றனர், அவரது பெற்றோர்.

பாய்மரப் படகில் வாழ்வது அதன் சவால்களைக் கொண்டுள்ளது, புயல் நிறைந்த கடல்களில் பயணிப்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை முறையை `தி ரீவா ப்ராஜெக்ட்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு - இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வி... மேலும் பார்க்க

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க

Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும். இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிர... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!

64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப... மேலும் பார்க்க

டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?

மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே. இந்த திட்டத்தின் மூலம... மேலும் பார்க்க