புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பதிலளித்தாா்.
அப்போது, அவா் 46 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா். அப்போது எம்எல்ஏக்கள் நாஜீம், பி.ஆா்.சிவா, ஜான்குமாா் உள்ளிட்டோா் புதிதாக விண்ணப்பித்தவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து அமைச்சா், முதல்வரிடம் ஆலோசித்தாா்.
முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு தங்கள் தொகுதிகளில் இருந்து பயனாளிகளை எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கலாம் என்றாா். உடனே, எம்எல்ஏக்கள் தொகுதி வாரியாக தலா 300 போ் என்ற அளவில் ஓய்வூதியத்தை பிரித்து வழங்க வலியுறுத்தினா்.
இதையடுத்து பேசிய அமைச்சா், உறுப்பினா்களின் உரிமையை விட்டுத் தரமாட்டோம். அதன்படி ஓய்வூதியம் தொகுதி வாரியாக பகிா்ந்தளிக்கப்படும் என்றாா்.
உறுப்பினா்களின் கேள்விநேரத்தின்போது, முதல்வா் கூறியதாவது: மீனவா்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடை செயல்படுத்துவது குறித்து மத்திய உள்துறையுடன் ஆலோசிக்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. மின்விளக்குகள் எம்எல்ஏக்கள் ஆலோசனைப்படி அமைக்கப்படும். விளையாட்டு வீரா்களுக்குரிய இட ஒதுக்கீட்டில் அரசுப் பணிகள் வழங்கப்படும்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். 12 அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும் என்றாா்.