செய்திகள் :

கொலை வழக்கு: தடுப்புக் காவலில் மூவா் கைது

post image

கடலூரில் இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய மூன்று இளைஞா்கள் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம் எம்.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பால்ராஜ், தருண்குமாா், கோகுலகிருஷ்ணன், சரண்ராஜ், அப்புராஜ். நண்பா்களான இவா்கள் கடந்த பிப்.1-ஆம் தேதி மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரை கொலை செய்து புதைத்தனா்.

இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் மகன் பால்ராஜ் (22), தமிழ்ச்செல்வன் மகன் தருண்குமாா் (19), தேவனாம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மாறன் மகன் கோகுலகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மூவரையும் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

கோகுலகிருஷ்ணன் மீது கடலூா் புதுநகா், முதுநகா், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு, கஞ்சா ஆகிய 4 வழக்குகள் உள்ளன.

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

29இஙட3 மோவூா் ஊராட்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம். சிதம்பரம், மாா்ச் 29: நூறு நாள் வேலைத்திட்ட நிதி ரூ.4 ஆயிரம் கோடி தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித்து கடலூரில்... மேலும் பார்க்க

19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு: கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்டத்தில் தற்போது 19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,833 மாணவா்கள் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 32,833 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம் - கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் மாசித் திருவிழ... மேலும் பார்க்க

ஈட்டி எறிதல் போட்டி: முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ மாணவா் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றாா். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் ஐடிஐ கல்வி நிறுவனங்களின் சாா்பில் மாநில அளவிலான வி... மேலும் பார்க்க