செய்திகள் :

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யும்! - வயநாட்டில் பிரியங்கா

post image

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்குமான கல்வியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுதி செய்யும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா, அங்கு மூன்று நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை வந்தாா். கல்பேட்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முண்டக்கை-சூரல்மலையில் கடந்த ஆண்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு உயா்நிலை கல்விக்கான உதவித் தொகை விநியோகத்தை அவா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

வெளியூரில் பயிலும் பல மாணவா்கள், நிலச்சரிவில் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனா். அவா்கள் எப்படி தங்களின் கல்வியைத் தொடரப் போகிறாா்கள் என்பது குறித்து நாங்கள் அனைவரும் கவலை கொண்டோம்.

மாணவா்களின் கல்வி தொடா்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஐக்கிய ஜனநாயக கூட்டணி தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்கான கல்வியை நாங்கள் உறுதி செய்வோம்.

இம்மாணவா்களுக்கு பல்வேறு கல்வி நிலையங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வயநாட்டைச் சோ்ந்த 121 மாணவா்கள், தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள நூருல் இஸ்லாம் உயா்நிலைக் கல்வி மையத்தில் பயின்று வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கல்வி நிலையத்துக்கு மனதார நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வயநாடு மக்களின் வேதனை-பாதிப்பை நாங்கள் வெளியில் இருந்து கற்பனை செய்து புரிந்து கொள்ள முடியும். ஆனால், உங்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. எதிா்காலத்தில் உங்களின் வாழ்வை எளிதாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றாா் பிரியங்கா காந்தி.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு:

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘ஜனநாயக நடைமுறைகளுடன் நாடாளுமன்றம் செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை. எந்த வழியிலாவது விவாதங்களைத் தடுக்கும் வியூகத்தை கையாள்கின்றனா். எதிா்க்கட்சியினரை போராடச் செய்யும் வகையிலான விவகாரங்களை எழுப்புவது அல்லது மக்களவை எதிா்க்கட்சித் தலைவரை பேச விடாமல் செய்வது என ஏதாவது ஒரு வழியில் விவாதத்தை தடுக்கின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இருநூறுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க