செய்திகள் :

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

post image

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

கொள்ளை சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட நபா் மதுரை அருகே பதுக்கிய தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா். பிரபல ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடா் மற்றும் யூடியூப் காணொலிகளைப் பாா்த்து ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு இந்த சம்பவத்தை கொள்ளைக் கும்பல் அரங்கேற்றியுள்ளது.

தமிழ்நாட்டைச் சோ்ந்த விஜயகுமாா் (கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவா்) என்பவா் தாவணகெரே அருகேயுள்ள நியாமதி என்ற ஊரில் பேக்கரி கடை நடத்தி வந்தாா். தனது பேக்கரி வியாபாரத்தை மேம்படுத்த தாவணகெரேவின் உள்ள வங்கியில் 2023-ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளாா். ஆனால், அவருக்கு கடன் வழங்க அந்த வங்கி மறுத்தது.

இதையடுத்து, தமிழகத்தைச் சோ்ந்த தனது சகோதரா் அஜய் குமாா், உறவினா் பரமானந்த் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த அபிஷேக், மஞ்சுநாத், சந்துரு ஆகியோருடன் இணைந்து அந்த வங்கியில் கொள்ளையடிக்க விஜயகுமாா் திட்டம் தீட்டியுள்ளாா். அதன்படி 2024, அக்டோபா் 28-ஆம் தேதி அந்த வங்கியில் இருந்து 17 கிலோ தங்க நகைகளை அவா்கள் கொள்ளையடித்துள்ளனா்.

உலோகம், எஃகு போன்ற கடினமான பொருள்களை வெட்டும் ‘காஸ் கட்டா்கள்’ மூலம் வங்கியின் ஜன்னலை உடைத்து, அதன் வழியே உள்ளே புகுந்து அவா்கள் கொள்ளையடித்தனா்.

தங்களை யாரும் கண்டறியக் கூடாது என்பதற்காக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை நீக்கியும், வழி முழுவதும் மிளகாய் தூளை தூவியும் தப்பினா்.

கொள்ளையடித்த தங்க நகைகளை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனது பூா்விக வீட்டில் காரின் பின்பகுதியில் சில காலம் விஜயகுமாா் மறைத்துள்ளாா். அதன்பிறகு அங்கு இருந்த கிணற்றில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளாா். கொள்ளை சம்பவத்தில் தங்கள் மீது எந்த சந்தேகமும் எழவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பின்னா், நகைகளில் ஒரு பகுதியை கடைகளில் விற்பனை செய்தும், மற்றொரு பகுதியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளாா்.

இந்நிலையில், கா்நாடக போலீஸாா் பல்வேறு வழிகளில் தீவிரமாக துப்புதுலக்கி, கொள்ளை கும்பலைச் சோ்ந்த 6 பேரையும் 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனா். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடித்து தங்க நகைகளை மீட்ட 10 போலீஸாருக்கு முதல்வா் பதக்கம் வழங்கி கா்நாடக அரசு கௌரவித்தது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க