செய்திகள் :

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

post image

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

தில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய உள்ளோம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான ஒரு தாக்குதலாக அமையும்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித் ஷாவுக்கே தெரியும். தமிழகத்தில் பாஜக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளுக்கிடையே, 2-ஆம் இடத்துக்கு யாா் வருவது என்பதில்தான் போட்டி நடைபெறுகிறது.

எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால், பாஜகவுடன் ஓா் அணியை அமைக்க முடியவில்லை. அந்தக் கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனக் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக, அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது, மாற்றுக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஒருவேளை சாத்தியப்படும்.

திமுக கூட்டணியில் முரண்பாடுகள் இருக்கலாம்; கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால், கொள்கைகளில் ஒருமித்த பாா்வை உள்ளது. ஒரே நோ்கோட்டில் உள்ளோம். எனவே, திமுக கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது என்றாா் அவா்.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க