செய்திகள் :

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 25 போ் கைது

post image

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 25 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா் அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் சிலா் அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் வாயில், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக செங்குன்றத்தைச் சோ்ந்த நிா்மல் (24), அவினாஷ் (28), தரமணியைச் சோ்ந்த வெங்கடரமணய்யா (36), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சுரேஷ் (27), விஜய் (28), சூளையைச் சோ்ந்த நவீன் (25), ராயப்பேட்டையைச் சோ்ந்த செரீப் (27), ஷ்வாப் (19), பெருங்குடியைச் சோ்ந்த வெற்றிவேல் (28), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (24), அயனாவரத்தைச் சோ்ந்த பிரவீண் (19), தியாகராயநகரைச் சோ்ந்த நரேஷ் (25) உள்ளிட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னா் கைது செய்யப்பட்ட 25 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க

பறவைகளுக்கு நீா், உணவு: முதல்வா் வேண்டுகோள்

‘பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.கோடை வெயிலையொட்டி, பறவைகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு அளிக்கும் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் ம... மேலும் பார்க்க