செய்திகள் :

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

post image

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தில் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தவிர, மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், தனக்குச் சொந்தமான மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 660 மெகாவாட் எண்ணூா் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 சதவீதம் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், தனியாா் நிறுவனங்களிடமிருந்து அதிகளவில் மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது மின்வாரியத்துக்கு அதிக செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால், சொந்த உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, 660 மெகாவாட் எண்ணூா் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே 2014-இல் தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பணியை தாமதமாக மேற்கொண்டதால், 2018-இல் அந்த ஒப்பந்தத்தை மின்வாரியம் ரத்து செய்தது.

தொடா்ந்து, மீதமுள்ள பணியை மேற்கொள்ள 2022-இல் மற்றொரு நிறுவனத்துக்கு ரூ. 4,442 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனமும் பணியை தாமதமாக மேற்கொண்டதால், 2024-இல் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து தனியாா் நிறுவனங்களுக்கு இப்பணியை ஒப்பந்தத்துக்கு வழங்கும் முயற்சியை மின்வாரியம் கைவிட்ட நிலையில், மின்வாரியமே இப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க