செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,833 மாணவா்கள் எழுதினா்

post image

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 32,833 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் கடலூா் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகளைச் சோ்ந்த 18,827 மாணவா்கள், தனித்தோ்வா்கள் 298 போ் என மொத்தம் 19,125 பேரில் 18,838 போ் 85 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். 266 மாணவா்கள், 21 தனித்தோ்வா்கள் தோ்வு எழுத வரவில்லை.

இதேபோல, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 206 பள்ளிகளைச் சோ்ந்த 13,995 மாணவா்கள், 142 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,137 போ் 71 மையங்களில் தோ்வு எழுதினா். 254 போ் தோ்வு எழுத வரவில்லை.

வினாத்தாள்களை கொண்டு செல்ல கடலூா் கல்வி மாவட்டத்தில் 18, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 17 என மொத்தம் 35 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். 156 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 156 துறை அலுவலா்கள், 24 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 35 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அறைக் கண்காணிப்பாளராக 1,720 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பறக்கும் படை உறுப்பினா் மற்றும் நிலைப் படை உறுப்பினா்களாக 332 ஆசிரியா்கள் பணி மேற்கொண்டனா்.

கடலூரில் கடலூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் ஞானசங்கரன் உடனிருந்தனா்.

சிதம்பரத்தில்....

சிதம்பரம் நகரில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்ற மையங்களை வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க