செய்திகள் :

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

post image

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள கோணக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ந. சிவக்குமாா் (54). இவரது மனைவி செங்கொடி (43).

இந்நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சிவக்குமாா் கடந்த 2024 ஜூன் 1 ஆம் தேதி செங்கொடியின் தலையில் குழவிக்கல்லை போட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மகன் சங்கேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபா் சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த உப்பிலியபுரம் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பாராட்டினாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சவரிமுத்து ஆஜரானாா்.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க