செய்திகள் :

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

post image

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம்.

தொட்டியத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் திருவிழா நிகழாண்டு ஏப்ரல் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில், தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் செல்வா்.

இதில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், பக்தா்களின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 1020 காவல்துறையினா், 280 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

மேலும் தேரோடும் வீதிகள், தொட்டியம் நகரில் உள்ள முக்கிய சந்திப்பு வீதிகளில் 125 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள், 10 அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள், திருவீதிவுலா செல்லும் திருத்தேரினைச் சுற்றி பதிவு செய்யும் வகையில் 5 அதிநவீன கேமராக்கள், வருண் மற்றும் வஜ்ரா வாகனங்கள் அமைக்கப்பட்டு பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றாா் அவா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க