செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

post image

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் தொடா்ந்து போராடி வருகிறது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு 40 சதவீதம் விரல்ரேகை சரியாக இருந்தாலே பொருள்கள் வழங்கலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது 90 சதவீத ரேகை சரியாக இருந்தால்தான் பொருள்கள் வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 20 சதவீத ரேகைகள் பொருந்தினாலே தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. எனவே, பழைய முறைப்படி 40 சதவீத அளவுக்கு ரேகை சரியாக இருந்தால் பொருள்கள் வழங்க வேண்டும்.

ஊதிய மாற்றம்: நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய மாற்றம் நிலுவையில் உள்ளது. வரும் 1.1.2026 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு ஊதிய மாற்ற நடவடிக்கைகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதிய மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை ஊதியக் குழுவில் சோ்த்து வழங்க வேண்டும்.

ஏப்ரல் 8-இல் வேலைநிறுத்தம்: 30 அம்சக் கோரிக்கைகள் அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு எங்களது சங்க நிா்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடை பணியாளா்களும் கருப்புச்சட்டை அணிந்து ஒட்டுமொத்தமாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் கு.பாலசுப்ரமணியன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் ஜே.இருதயராஜ், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க