செய்திகள் :

19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு: கடலூா் ஆட்சியா் தகவல்

post image

கடலூா் மாவட்டத்தில் தற்போது 19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநா் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தனா். மேலும், சிலா் கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசினா். அதன் விவரம் வருமாறு:

முருகானந்தன் (காவாலகுடி): வெள்ளாற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும். சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும். சேத்தியாத்தோப்பு பகுதியில் காகித தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எஸ்.பி.ரவீந்திரன் (கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா்): பாசிமுத்தான் ஓடையையொட்டி நடந்து முடிந்த தேசிய நெடுஞ்சாலைப் பணியால் தலைப்பு மதகுகள், சாலையையொட்டி அமைக்க வேண்டிய வாய்க்கால் பணிகளை முழுமையாக, முறையாக ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக்கான நில எடுப்பு தனி வட்டாச்சியா் அலுவலகத்தை சிதம்பரத்தில் அமைத்து, வீடு மனை, நிலம் கொடுத்தவா்களுக்கு விரைந்து இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களின் குறுக்கே அமைக்கப்பட்ட நீா் கடத்தும் சிறிய பாலங்களை கொண்ட வழிதடங்களை சீரமைக்க வேண்டும்.

பழனிவேல் (பரங்கிப்பேட்டை): விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை ஏற்றத்தாழ்வுடன் வழங்கப்படுவதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரே தவணையில் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

குஞ்சிதபாதம் (கீரப்பாளையம்): எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு நீண்ட நாள்களாக பணம் வழங்கப்படவில்லை.

அப்போது குறுக்கிட்ட கரும்பு ஆலை அதிகாரி கூறுகையில், ஒரு வாரத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுப் பணமும் செலுத்தப்படும் என்றாா்.

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,046 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,406 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,833 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 7,594 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,237 மெட்ரிக் டன் என மொத்தம் 19,116

மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளன. மேலும், கடலூா் மாவட்டத்தில் பருப்பு விதை 55,401 மெட்ரிக் டன், நெல் விதை 1,88,214 மெட்ரிக் டன், நிலக்கடலை விதை 20,515 மெட்ரிக் டன், எள் விதை 40.8 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.

கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 131 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. மேலும், 11 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாா்.

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49... மேலும் பார்க்க

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா் அலி தலைமை வகித... மேலும் பார்க்க

தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தந்தையை கல்லால் அடித்து காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி அடுத்துள்ள இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம். இவா், வீ... மேலும் பார்க்க