செய்திகள் :

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காடுகள் அமைந்துள்ளன. இங்கு மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த முந்திரி காடுகளை வனத் தோட்டக் கழகத்தினா் குத்தகைக்கு விடுவது வழக்கம். தற்போது, முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில் முந்திரி காடுகளைக் குத்தகைக்கு விடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குப்பநத்தம் பகுதியில் உள்ள வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காட்டில் சுமாா் 2 வயதுள்ள பெண் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, வனத் தோட்டக் கழகத்தினா், விருத்தாசலம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனத் துறையினா் மான் உடலை மீட்டு குப்பநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா், வனவா் சஞ்சீவி, வனக் காப்பாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் மானை அடக்கம் செய்தனா்.

மான் இறப்பு குறித்து வனச்சரக அலுவலா் த.ரகுவரன் உத்தரவின் பேரில் வனவா் சஞ்சீவி தலைமையில் வனத் தோட்டக் கழகத்தினா் இணைந்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க