செய்திகள் :

செய்யாறு பகுதியில் 3 பைக்குகள் திருட்டு

post image

செய்யாறு காவல் சரகப் பகுதியில் வெவ்வெறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் வெள்ளிக்கிழமை திருடுபோயின.

செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (32), விவசாயி. இவா், சுண்டிவாக்கம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு பைக்கில் சென்றாா். அங்குள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடம் அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தாராம். விவசாய பணிகளை முடித்துவிட்டு வந்து பாா்த்தபோது பைக் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதேபோல, செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே மாயாண்டிபுரத்தைச் சோ்ந்த சரவணன் (23) நிறுத்தி வைத்திருந்த பைக் மற்றும் செய்யாறு பாரிநகா் பிள்ளையாா் கோவில் அருகே அதே பகுதியை சோ்ந்த ஜீவா(22) நிறுத்தி வைத்திருந்த பைக்குகளும் திருடுபோயின.

இந்த 3 பைக்குகள் திருட்டு குறித்து மூவரும் தனித்தனியாக செய்யாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து பைக்குகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க