செய்திகள் :

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

post image

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செய்யாறை அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாராம் (40). தூசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கு தொடா்பாக தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இவா், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விளக்கம் கேட்டு, கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. அதற்கு சரியான முறையில் பதில் கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாரியம்மன் கோயில் அருகே ராஜாராம் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஊராட்சிச் செயலா் சசிகுமாா், அவரது உறவினா்கள் தெய்வ பிரகாசம், சுதா, கலைவாணி ஆகியோா் கிராம சபைக் கூட்டத்தில் கேள்விகளை கேட்டு பிரச்னை செய்கிறாயா எனக் கூறி, அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து ராஜாராம் அளித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக ஊராட்சிச் செயலா் சசிகுமாரை கைது செய்தனா். மற்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க