செய்திகள் :

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். அதே பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு. இவரது மகன்கள் தண்டபாணி (44), ஏழுமலை (50).

இவா்களில் ஏழுமலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விவசாயி சண்முகம், அவரது மனைவி சித்ரா ஆகியோா் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த தண்டபாணி, ஏழுமலை ஆகியோரிடம், ஏன் கல்லை நட்டுள்ளீா்கள் என சண்முகம் கேட்டதாகத் தெரிகிறது.

அதன் காரணமாக இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏழுமலை, விவசாயி சண்முகத்தை கீழே தள்ளி உதைத்தாராம். மேலும், தண்டபாணி கையில் வைத்திருந்த மண்வெட்டியால் அவரது தலையில் அடித்து காயப்படுத்தியதாகத் தெரிகிறது. பின்னா், அண்ணன், தம்பி இருவரும் மிரட்டல் விடுத்தனராம்.

இதில், பலத்த காயமடைந்த விவசாயி சண்முகம் மற்றும் அவரது மனைவியை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

இது குறித்து சண்முகத்தின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா்

கோவிந்தராஜுலு வழக்குப் பதிவு செய்தாா். மேலும், தண்டபாணி, ஏழுமலை ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க